- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் ..அமைச்சர் ரகுபதி பேட்டி
லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் ..அமைச்சர் ரகுபதி பேட்டி
By: vaithegi Tue, 17 Oct 2023 12:27:21 PM
சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை என்று அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இதையடுத்து இது குறித்து அவர் பேசுகையில்,
லியோ திரைப்படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. திரை உலகம் எங்களுடை நட்பு உலகம், திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம்.
மேலும் மலிந்த தயாரிப்பாளர்களின் படங்களை கூட வெளியிடுகிறோம், திரை உலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசு தான் காரணம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 6 சிறப்பு காட்சிகள் கொடுக்கும் போது தான் 4 மணிக்கு கொடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்