- வீடு›
- பொழுதுபோக்கு›
- சுசித்ரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதன் காரணம் என்ன?
சுசித்ரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதன் காரணம் என்ன?
By: Nagaraj Wed, 25 Nov 2020 6:40:00 PM
பிக்பாஸ் வீட்டிலிருந்து சுசித்ரா வெளியேற்றபட்டதன் காரணம் குறித்து இணையத்தில் ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் சுசித்ரா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் ஓட்டுகளால் தான் வெளியேற்றப்பட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மை கதை வேறு ஒன்றாம். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சுசித்ரா தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதே அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து யாரோ சிலர் தன்னை கொலை செய்ய முயல்வதாகக் கூறி நள்ளிரவில் பரபரப்பை கூட்டினார்.
அப்போதே நிகழ்ச்சி குழுவினருக்கு இவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பலாமா
என்ற சந்தேகம் தோன்றியதாம். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு சென்ற சுசித்ரா
நிகழ்ச்சியில் முழு ஈடுபாடு செலுத்தாமல் பிக்பாஸை தொல்லை செய்வதை மட்டுமே
வேலையாக செய்திருக்கிறார்.
பாலாஜிக்கு சப்போர்ட் செய்து கத்துவது,
அழுவது புலம்புவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்று பல்வேறு செயல்களில்
ஈடுபட்டதால் சேனல் தரப்பு கடுப்பாகி அவரை வெளியேற்றி விட்டார்களாம். இந்த
தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சுசித்ராவின்
நடவடிக்கைகள் சேனலுக்கு செம கெட்டப்பெயரை ஏற்படுத்தி விட்டது என்றும்
தகவல்கள் உலா வருகிறது.