Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வனால் படத்தை வெளியிட முடியாத நிலையில் இயக்குனர் சுந்தர்.சி

பொன்னியின் செல்வனால் படத்தை வெளியிட முடியாத நிலையில் இயக்குனர் சுந்தர்.சி

By: Nagaraj Sat, 08 Oct 2022 09:49:12 AM

பொன்னியின் செல்வனால் படத்தை வெளியிட முடியாத நிலையில் இயக்குனர் சுந்தர்.சி

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தால் தன் திரைப்படத்தை தீபாவளிக்கு பின்னர் வெளியிட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் இயக்குனர் சுந்தர்.C "காஃபி வித் காதல்" என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்திருந்தார்.


நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

sundar.c,coffee with love,announcement,diwali,coming soon ,சுந்தர்.சி, காபி வித் காதல், அறிவிப்பு, தீபாவளி, விரைவில்

தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் நன்றாக ஓடிக்கொண்டு இருப்பதால் சுந்தர்.C யின் "காஃபி வித் காதல்" திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் படத்தை சில வாரங்கள் கழித்து வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அடுத்த சில வாரங்களில் தீபாவளி படங்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் "பிரின்ஸ்" மற்றும் கார்த்தி நடிப்பில் "சர்தார்" என பெரிய திரைப்படங்கள் வெளியாவதால் சுந்தர்.C யின் "காஃபி வித் காதல்" தீபாவளிக்கு பிறகே வெளியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|