- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஷால் பிலிம் பேக்டரியில் வேலை செய்த பெண் லட்சக்கணக்கில் பணம் கையாடல்
விஷால் பிலிம் பேக்டரியில் வேலை செய்த பெண் லட்சக்கணக்கில் பணம் கையாடல்
By: Monisha Fri, 03 July 2020 12:05:59 PM
நடிகர் விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மூலம் அவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது கூட இந்நிறுவனத்தின் மூலம் ’துப்பறிவாளன் 2’ மற்றும் ’சக்ரா’ ஆகிய படங்களை அவர் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகாரில் எங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டார். ஆறு வருடங்களாகப் பணி செய்து கொண்டிருந்த அவர் சிறிது சிறிதாக பணத்தை கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கையாடல் செய்த பணத்தில் அவர் சொந்த வீடு வாங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் அவர் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மேலாளர் ஹரி தனது புகாரில் தெரிவித்துள்ளார்
இந்த புகாரை பெற்றுக்கொண்ட வடபழனி உதவி ஆணையர் இது குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறைக்கு அந்த மனுவை அனுப்பி வைத்தார். கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டால் சென்னை மத்திய குற்றப்பிரிவு இந்த மனுவை விசாரிக்கும்.