Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள யாத்திசை திரைப்படம்

பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள யாத்திசை திரைப்படம்

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:17:00 AM

பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள யாத்திசை திரைப்படம்

சென்னை: பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் யாத்திசை திரைப்படம் கருத்தியல் விவாதத்தை ஏற்படுத்தும் என படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பாண்டிய மன்னனான ரணதீரன் பின்னணியில் யாத்திசை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தை தரணி ராசேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க புது முகங்களின் பங்களிப்புடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

யாத்திசை திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் தரணி ராசேந்திரன், இந்தப் படத்துக்காக பல கட்ட ஆராய்ச்சிகள் செய்து படத்தைத் தயாரித்துள்ளேன்.

Tags :
|
|