Advertisement

நிறைய கடன் தொல்லையா இதை செய்யுங்கள் பொதும்

By: vaithegi Wed, 22 Nov 2023 6:21:14 PM

நிறைய கடன் தொல்லையா இதை செய்யுங்கள் பொதும்


இன்றைக்கு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன். இந்த கடன் தொல்லையால் பல பேரின் வாழ்க்கை சின்னா பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த கடனை பொருத்த வரையில் அவசர தேவைக்கு வாங்கி விடுகிறோம். அந்த கடனை திருப்பி அடைக்க படும்பாடு பெரிய பாடு தான். அதிலும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நேரத்தில் கடன் கொடுத்தவர் வந்து விட்டால் அதை விட கொடுமையான தருணம் வேறு எதுவும் இல்லை.

இதையடுத்து கடனை எப்படி பால் கொண்டு தீர்ப்பது என்பது பற்றி பார்ப்போம்.கடனை எப்படி பால் கொண்டு தீர்ப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எல்லாம். இந்த பதிவில் அதற்கான விடையை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பால் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. அந்தப் பாலை தினம் தினம் நாம் கையாளும் விதத்தில் நமக்கு பணவரவு ஏற்பட்டு கடன் அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

debt,cash flow ,கடன் ,பணவரவு

ஆனால் முன்பெல்லாம் பெண்கள் காலையில் குளித்து முடித்த பிறகு தான் சமையலறைக்குள் செல்வார்கள். இன்றைய சூழ்நிலை அதற்கு ஏதுவாக இல்லை. சமையலறைக்குள் செல்லும் முன் கை கால்களை சுத்தமாக அலம்பி தலையை வாரி கொண்டு அதன் பிறகு சொல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் சமையலறைக்குள் நுழைந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை பாலை காய்ச்சுவது தான்.

புதிதாக ஒரு வீடு கட்டி நாம் உள்ளே போனாலும் சரி, அல்லது எந்த வித விசேஷமாக இருந்தாலும் முதலில் பாலை தான் காய்ச்சுவோம். பாலானது லட்சுமி கடாக்ஷம் இருந்ததாகவும், பால் பொங்குவதை வீட்டில் சுபிட்சம் நிறைவதற்கான குறியீடாகவும் பார்க்கிறோம். அத்தகைய பாலை தொடும் போது நாம் சுத்தமாக தொட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. இது ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவானது. அடுத்து பாலை காய்ச்சுவதற்கு முன்பாக ஒரு டம்ளரில் ஊற்றி பூஜையறையில் சுவாமி படத்துக்கு முன்பாக வைக்க வேண்டும். தீபம் ஏற்றி வழிபட முடிந்தால் வழிபடுங்கள் இல்லை என்றால் அப்படியே பாலை வைத்தால் கூட போதும். சிறிது நேரம் பால் அங்கேயே இருக்கட்டும். அதன் பிறகு அந்த பாலை எடுத்து பயன்படுத்தி விடுங்கள்.இதை தினம் தினம் செய்து வருபவர்கள் வீட்டில் வறுமை கடன் தொல்லை நீங்கி நல்ல பணம் வரவு ஏற்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடனால் அவதிப்படுபவர்கள் இதை பின்பற்றும் போது நிச்சயம் கடன் அடைவதற்கான வாய்ப்பு விரைவில் அமையும் என்று நம்பப்படுகிறது.

Tags :
|