Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • உங்கள் தலையெழுத்தே மாறி ராஜபோக வாழ்க்கை வாழ இந்த 1 வரி மந்திர வார்த்தையை 3முறை உச்சரித்தாலே போதும்

உங்கள் தலையெழுத்தே மாறி ராஜபோக வாழ்க்கை வாழ இந்த 1 வரி மந்திர வார்த்தையை 3முறை உச்சரித்தாலே போதும்

By: vaithegi Sun, 06 Aug 2023 1:59:02 PM

உங்கள் தலையெழுத்தே மாறி ராஜபோக வாழ்க்கை வாழ இந்த 1 வரி மந்திர வார்த்தையை 3முறை உச்சரித்தாலே போதும்

நம்முடைய விதி பலனையே மாற்றி அமைக்க கூட ஒரு அற்புதமான மந்திரத்தை பற்றி பார்ப்போம்.இந்த மந்திரத்தை ஜெபிக்க நீங்கள் விரதம் இருக்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும், வழிபாடு விதிமுறைகள் என எதுவுமே கிடையாது. காலையில் தூங்கி எழுந்தவுடன் முதல் காரியமாக இதை செய்தால் போதும். நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாக கூடிய வாய்ப்பை இந்த மந்திரம் ஏற்படுத்தி தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தூங்கி எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரம் :
ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியமானதோ அதை விட முக்கியம் காலையில் கண்விழிக்கும் பொழுது அந்த மனிதன் நினைக்கும் செயலும் பார்க்கும் பொருளும். இது தான் அவனுடைய அன்றைய நாளை தீர்மானிக்கும். எனவே தான் காலையில் எழுந்திருக்கும் போதே நல்லவற்றை பற்றி சிந்தித்தும் நல்லவற்றை பார்த்தும் எழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

life is the magic word ,வாழ்க்கை ,மந்திர வார்த்தை

அந்த வகையில் காலையில் தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் வழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இது மிகவும் நல்லதும் கூட. ஏனெனில் ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. ஆகையால் தான் தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் பழக்கம் நம்முடைய வழக்கத்தில் உள்ளது. அப்படி உள்ளங்கையை பார்க்கும் பொழுது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

அம் பகவ
இந்த மந்திரத்தை நாம் காலையில் உள்ளங்கையை பார்த்து 3 முறை சொன்னால் போதும். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நிகழும் என சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஹம் என்றால் மங்கள அர்ச்சனை எனவும் பகவ என்றால் பகவானை குறிக்கும் சொல்லாகவும் உள்ளது. மங்கள அர்ச்சனைகள் பொருந்திய பகவானை நாம் நமஸ்கரிப்பது போல் ஆகும்.
இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்களுடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் என யாரை வேண்டுமானாலும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். பகவ என்ற சொல் ஆண் தெய்வத்தை குறிப்பது போல இருந்தாலும் உங்களுடைய குலதெய்வமும் இஷ்ட தெய்வமும் பெண் தெய்வமாக இருந்தாலும் இதே மந்திரத்தை சொல்லி நினைத்துக் கொள்ளலாம் தவறு ஒன்றும் இல்லை இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கை நல்ல ஒரு சுபிக்ஷ நிலைக்கு மாறி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Tags :