Advertisement

தீபாவளி வரலாறுகள் பற்றி தெரிந்துகொள்வோமா

By: vaithegi Fri, 03 Nov 2023 3:07:34 PM

தீபாவளி வரலாறுகள் பற்றி தெரிந்துகொள்வோமா


தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாலகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு புராண கதைகள் ஒவ்வொரு சமூகத்திலும் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து புராணங்களிலும் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகை வருகிறது என்பது ஆச்சர்யமான உண்மை. அதில் எந்தெந்த புராண கதைகளின் படி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்….

திருமால், வராக அவதாரத்தில் இருந்த போது, பூமாதேவிக்கும் வராக அவதாரதிற்கும் பிறந்தவன் நரகாசூரன். பிரம்மனை நோக்கி தவம் புரிந்து தனது தாயால் மட்டுமே உயிரிழக்கும்படியான சாகா வரம் கேட்டு தவம் புரிந்தான். அதன்படி பிரம்மனும் வரம் தர, அதன் பிறகு தனக்கு சாவே இல்லை என்பதை உணர்ந்து மக்களை துன்புறுத்த துவங்கினான்.

இதனை அடுத்து கிருஷ்ண அவதாரத்தில் இருந்த திருமால், தனது மனைவி பூமாதேவியின் அவதாரமான சத்யபாமாவை நடனமாட வைத்து, அந்த நடனத்தில் நரகாசூரன் மயங்கி பின்னர் கிருஷ்ணரை அழிக்க அம்பு எய்வான். அந்த சமயம் தனது கணவர் மேல் அம்பு படாமல் தடுத்து அதனை கொண்டு நரகாசுரனை அழித்து விடுவாள் பூமாதேவியின் அவதாரமான சத்யபாமா.

diwali,histories ,தீபாவளி ,வரலாறுகள்

தன் மரணத்தை அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என நரகாசூரன் மரண தருவாயில் கேட்டுகொண்டதன் பெயரிலும், நரகாசுரனை வதம் செய்து தலைக்கு எண்ணெய் வைத்து கிருஷ்ணர் நீராடிய காரணத்தாலும் அன்றைய தினம் தலைக்கு எண்ணெய் வைத்து நீராடி, புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாக ஒரு வரலாறு கூறுகிறது.

திருமால் ராமர் அவதாரத்தில் இருந்த போது, மனைவி சீதாவை ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்று விடுவார். அதன் பிறகு தனது படைபலத்துடன் ராமன் இலங்கை சென்று ராவணனை வீழ்த்திவிட்டு நாடு திரும்புவார். பிறகு 14 ஆண்டுகள் ராமன், சீதா வனவாசம் அனுபவித்து விட்டு நாடு திரும்பிய நாளை தீபாவளி தினமாக கொண்டாடுகிறார்கள் ஒரு புராண வரலாறு கூறுகிறது.

இதையடுத்து 1577ஆம் ஆண்டு நரக சதுர்த்தி தினத்தன்று, பொற்கோவில் கட்டுவதற்கு துவங்கப்பட்ட நாளை தீபாவளி தினமாக சீக்கியர்கள் கொண்டாடி வருகின்றனர். உஜ்ஜயினியில் விக்ரமாதித்ய அரசன் முடிசூட்டிய நாளை தீபாவளியாக கொண்டாடியதாகவும் ஒரு வரலாறு உண்டு.

Tags :
|