Advertisement

ரொம்ப பெரிய பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் இதை செய்யுங்க போதும்

By: vaithegi Sun, 06 Aug 2023 2:07:54 PM

ரொம்ப பெரிய பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் இதை செய்யுங்க போதும்

வீட்டில் வறுமை, கஷ்டம், கடன் சுமை, பண கஷ்டம், வேலையில்லா திண்டாட்டம், மன நிம்மதி இல்லை, என்பவர்கள் இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் இந்த பிரச்சனைகளுக்கான விடிவுகாலம் பிறக்கும்.

பணப்பிரச்சனை தீர வீட்டில் வளர்க்க வேண்டிய செடி:
இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலை எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த திசையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில், சின்னதாக ஒரு நெல்லிக்காய் செடியை நட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அதில் தண்ணீர் ஊற்றி, வளர்த்து வாருங்கள்.

தண்ணீரை ஊற்றும் போது அந்த செடியிடம் உங்களுடைய பண கஷ்டத்தையும் சொல்லலாம். அந்தச் செடி வளர வளர உங்கள் வீட்டில் இருக்கும் செல்வ செழிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கும். பணக்கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வீட்டிற்கு உள்ளேயே கூட ஒரு சின்ன தொட்டியில் வடக்கிழக்கு மூலையில் சின்ன சைஸ் நெல்லிக்காய் செடியை வளர்க்கலாம். தவறு கிடையாது.

சரி, செடி வளர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பவர்கள் என்ன செய்வது?
சின்ன ஆரஞ்சு நிறத்தில் சதுர வடிவில் 1 துணி எடுத்துக்கோங்க. அதில் ஒரு நெல்லிக்காயை வைத்து முடிச்சு போட்டு வடகிழக்கு மூலையில் தொங்க விடுங்கள். இந்நெல்லிக்காய் காய்ந்தாலும் பரவாயில்லை. மாதத்திற்கு 1 முறை பழைய நெல்லிக்காயை எடுத்துவிட்டு புது நெல்லிக்காயை வைக்கவும்.

money trouble,gooseberry ,பணக்கஷ்டம் ,நெல்லிக்காய்


வீட்டில் எப்போதும் நெல்லிக்காய் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் ஊறுகாய் போட்டு வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது தேன் நெல்லிக்காய், காய்ந்த நெல்லிக்காய் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் நெல்லிக்காய் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். இது செல்வ செழிப்புக்கும் நல்லது. இதை நீங்கள் சாப்பிடும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் புகைப்படம் கட்டாயம் பூஜை அறையில் இருக்கும் அல்லவா. அந்த மகாலட்சுமி தாயை இளஞ்சிவப்பு நிறத்தில் விரிப்பு விரித்து அதன் மேலே அமர வைத்தால், ரொம்ப ரொம்ப நல்ல பலன் கிடைக்கும். இளஞ்சிவப்பு நிறமும் மகாலட்சுமி தாயும் சேரும்போது அந்த இடத்தில் பண ஈர்ப்பு விதி அதிகரிக்கும்.

இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் பூக்களை வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு சூட்டி வழிபாடு செய்து வாருங்கள். மேலே சொன்ன அனைத்து விஷயங்களை எல்லாம் முழு நம்பிக்கையோடு மகாலட்சுமியை நினைத்து செய்யும்போது போது உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கும்.


Tags :