Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நெல்லிக்கனியால் நம் உடல் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்

நெல்லிக்கனியால் நம் உடல் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்

By: vaithegi Sat, 02 Dec 2023 11:13:25 AM

நெல்லிக்கனியால் நம் உடல் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்


பொதுவாக ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும்.நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கும். கண்பார்வை தோல் வளர்ச்சி மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் நெல்லிக்கனி உதவக்கூடியது. உயிர்ச்சத்து குறைவால் பல்லில் ரத்தம் வந்தால், நெல்லிக்கனி சாப்பிட நல்ல பலன்களை காணலாம்.

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

benefits,gooseberry ,நன்மைகள் ,நெல்லிக்கனி


1.ஆரோக்கியம் தரும் நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

2.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.

3.ஆரோக்கியம் மிக்க நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்

4.மேற்கூறிய கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

5.மேலும் ஆரோக்கியம் மிக்க நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும.

6.ஆரோக்கியம் மிக்க நெல்லிக்கனி மூலம் அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.

7.நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண்,போன்ற நோய்கள் குணமாகும்

8.ஆரோக்கியம் மிக்க நெல்லிக்கனி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.

9.ஆரோக்கியம் மிக்க நெல்லிக்கனியை தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

10.மேலும் அதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்


Tags :