Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவில் கைலாசாவைப் பார்க்க விரும்புகிறேன்; நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பதிவு

விரைவில் கைலாசாவைப் பார்க்க விரும்புகிறேன்; நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பதிவு

By: Nagaraj Tue, 25 Aug 2020 6:54:01 PM

விரைவில் கைலாசாவைப் பார்க்க விரும்புகிறேன்; நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பதிவு

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறியபடி தான் உருவாக்கிய தனிநாடு என்று அவர் கூறும் கைலாசாவின் நாணயங்களை வெளியிட்டுள்ளார். இதை பாராட்டும் விதமாக நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கைலாசா நாட்டின் நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று நித்தியானந்தா காணொளி ஒன்றின் மூலம் அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். உள்நாட்டு புழக்கத்துக்கு என்று ஒரு தனி நாணயமும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு என்று வேறொரு தனி நாணயமும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

'இந்து முதலீட்டு மற்றும் ரிசர்வ் வங்கி' என்று பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் வங்கியின் செயல்பாடுகளை நிர்வகிக்க வேறு ஒரு நாட்டுடன் தனது நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் நித்தியானந்தா தெரிவித்து இருந்தார்.

mira mithun,nithiyananda,kailasa,wish to see,twitter post ,
மீரா மிதுன், நித்தியானந்தா, கைலாசா, பார்க்க விருப்பம், டுவிட்டர் பதிவு

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 360 கட்டுரைகள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றை கைலாசா துறவிகள் மடத்தின் உறுப்பினர்கள் இதற்காக ஆராய்ச்சி செய்தனர் என்றும் நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டேன். அதற்கான பணம் இது என்று நித்தியானந்தா வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தன் டுவிட்டர் பக்கத்தில் நித்தியானந்தாவை பாராட்டி, விரைவில் கைலாசாவை பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்து டுவிட் போட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது: எல்லோரும் அவரை கேலி செய்தனர். எல்லோரும் அவரை துஷ்பிரயோகம் செய்தனர். ஒவ்வொரு ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் இன்று அவர் ஒரு புதிய நாட்டை உருவாக்குகிறார். கைலாசா. நாளுக்கு நாள் வலுவாக செல்கிறார். விரைவில் கைலாசாவைப் பார்க்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :