Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை

By: Monisha Thu, 03 Dec 2020 1:07:11 PM

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் கொடைக்கானலிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலைப்பாதையில் இன்றிரவு 7 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

storm,precaution,hill road,traffic,barrier ,புயல்,முன்னெச்சரிக்கை,மலைப்பாதை,போக்குவரத்து,தடை

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு, பழனி, அடுக்கம் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

மறு அறிவிப்பு வரும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Tags :
|