Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி

மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி

By: Monisha Thu, 21 May 2020 12:29:23 PM

மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் மாகாணம் சாரிகார் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் ரமலான் மாத சிறப்பு தொழுகை நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் மசூதிக்கு வந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் சிலர் மசூதிக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி மசூதியை விட்டு வெளியே ஓடினர். ஆனால் பயங்கரவாதிகள் சற்றும் ஈவு, இரக்கமின்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினர்.

terrorists attack,mosque in afghanistan kills 8 people ,பயங்கரவாதிகள்,தாக்குதல்,ஆப்கானிஸ்தான்,மசூதி,8 பேர் பலி

இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த நபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை என தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Tags :