பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் சந்திப்பு
By: Nagaraj Fri, 21 Oct 2022 6:59:26 PM
குஜராத்: பிரதமருடன் சந்திப்பு... குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை முன் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் 3 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், 2017ல் ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
ஜனவரி 1, 2022 முதல் 2வது முறையாக பொதுச் செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பயணத்தின் முதல் நாளான நேற்று மும்பையில்
உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் உள்ள தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின்
நினைவிடத்தை பார்வையிட்டார். கவுன்சில் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்
அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், குஜராத் சென்ற
அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை
நடத்தினார். இந்நிலையில், குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில்
உள்ள ஒற்றுமைச் சிலைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை பிரதமர்
நரேந்திர மோடி சந்தித்தார்.