இலக்கிய விழாவு சின்னத்தை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
By: Nagaraj Thu, 15 Dec 2022 7:33:58 PM
சென்னை: இலக்கிய விழாவுக்கான சின்னத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இலக்கிய வளம் மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 4 இலக்கிய விழாக்கள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, பொது நூலக இயக்ககம் சார்பில் வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதி நாகரிக மரபு அடிப்படையில் 4 இலக்கிய விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், சென்னையில் இலக்கிய விழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பொருநை இலக்கிய விழா கடந்த மாதம் (நவம்பர்) 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளின் கலாச்சாரத்தின் கூடாரமாக விளங்கும் சென்னை இலக்கிய விழா அடுத்த ஆண்டு (2023) முதல் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. ஜனவரி 6 முதல் 8ம் தேதி வரை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறும்.
இவ்விழாவின்இலக்கியப் படைப்புகள் , இலக்கிய வாசகர்களுக்கு மேடை, பண்பாட்டின் சிகரங்கள், கல்லூரி மாணவர்களை இலக்கியம் நோக்கி வழிநடத்தும் மாண்புமிகு ஆளுமைகளின் உரையாடல்கள் மாணவர்களுக்கென தனி அரங்கம், கதை, பாடல், நாடகம் மூலம் நம் இலக்கிய உலகை குழந்தைகளுக்குத் திறந்து வைக்கும்.
இலக்கிய அரங்கம் மற்றும் சர்வதேச மற்றும் இந்திய சினிமாவை திரை மொழிகளாக கொண்ட காட்சி அரங்கம். அரசு பள்ளி மாணவர்களின் பொம்மலாட்டம், நாடகம், பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இந்த 3 நாட்களும் மக்கள் திருவிழாவை காண முடியும். சென்னை இலக்கிய விழாவைக் கொண்டாடும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அப்போது வண்ண விளக்குகள், ஓவியங்கள், ஓவியங்களால் நிரம்பி வழியும்.
இதுதவிர தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் காலத்து அரிய இதழ்கள், புத்தகங்கள், ஆவணங்கள், அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு தொடர்பான படங்கள் ஆகியவை நூலக வளாகத்தில் வைக்கப்படும் .இந்த இலக்கிய விழாவுக்கான சின்னத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.