எலான் மஸ்கிற்கு கடும் கண்டம் தெரிவித்த ஐ.நா சபை
By: Nagaraj Mon, 19 Dec 2022 6:55:24 PM
நியூயார்க்: கடும் கண்டனம்... ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்கிற்குஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டித்துள்ளது.
சில பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், ட்விட்டருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் நேற்று அறிவித்தார்.
எலோன் மஸ்க் தனது குடும்பத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றம் சாட்டியதை அடுத்து, சில பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
எலோன் மஸ்கின் பிரைவேட் ஜெட் பயணங்களைத் தொடர்ந்து @ElonJet என்ற ட்விட்டர் கணக்கை எலோன் மஸ்க் கடந்த புதன்கிழமை முடக்கியதை அடுத்து சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.