Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘புஷ்புல்’ ரயில் சோதனை ஓட்டம்: எங்கிருந்து எதுவரை தெரியுங்களா?

‘புஷ்புல்’ ரயில் சோதனை ஓட்டம்: எங்கிருந்து எதுவரை தெரியுங்களா?

By: Nagaraj Sat, 28 Oct 2023 12:27:11 PM

‘புஷ்புல்’ ரயில் சோதனை ஓட்டம்: எங்கிருந்து எதுவரை தெரியுங்களா?

அரக்கோணம்: நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ள ‘புஷ்புல்’ ரயில் சோதனை ஓட்டம் அரக்கோணம்-சென்னை இடையே நடந்தது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் மார்க்கங்களில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரயில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிவேக ரயிலாகும். ஆனால் அதிக கட்டணம் என்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

arakkonam,chennai,pushbul,run,test,train ,அரக்கோணம், ஓட்டம், சென்னை, சோதனை, புஷ்புல், ரயில்

இதனை போக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்போன்று ‘புஷ்புல்’ என்ற புதிய ரயிலை வடிவமைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து சென்னை ஐசிஎப்பில் ‘புஷ்புல்’ ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் நேற்று சென்னை-அரக்கோணம் இடையே நடந்தது.

Tags :
|
|