24 மணி நேரத்தில் எல் போபோ எரிமலை 36 முறை சாம்பல், புகையை வெளியேற்றியது
By: Nagaraj Sun, 16 Aug 2020 10:12:31 AM
மெக்ஸிகோவின் அடையாளமாக கருதப்படும் எல் போபோ எரிமலை கடந்த 24 மணி நேரத்தில் எரிமலை 36 முறைக்கும் அதிகமாக சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றி உள்ளது.
மெக்ஸிகோவில் உள்ள எல் போபோ எரிமலை சாம்பலையும், புகையையும் அதிக அளவில் வெளியேற்றி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மெக்ஸிகோவின் அடையாளமாகக் கருதப்படும் இந்த எரிமலையில் நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது.
சுமார் ஆயிரத்து 968 அடி உயரத்திற்கு சாம்பலையும், புகையையும் எல் போபோ
எரிமலை வெளியேற்றி வருகிறது. இதையடுத்து தொடர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன்
இருக்குமாறு மெக்ஸிகோவின் பேரிடர் தடுப்புக்கான தேசிய மக்கள் மையம்
அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த எரிமலை 36 முறைக்கும் அதிகமாக சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.