Advertisement

கொரோனா பரவால் பொதுத்தேர்தல் 4 வாரங்கள் ஒத்தி வைப்பு

By: Nagaraj Mon, 17 Aug 2020 12:15:41 PM

கொரோனா பரவால் பொதுத்தேர்தல் 4 வாரங்கள் ஒத்தி வைப்பு

பொதுத் தேர்தல் தள்ளி வைப்பு... நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கி இருப்பதால் அங்கு விரைவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தல் மேலும் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், நாட்டின் பொதுத் தேர்தல் அக்டோபர் மாதம் 17ந் தேதி நடைபெறும் என்றார். முன்னதாக அடுத்த மாதம் 19ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

general election,postponement,announcement,corona spread ,பொதுத் தேர்தல், தள்ளி வைப்பு, அறிவிப்பு, கொரோனா பரவல்

இந்நிலையில் அங்கு மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி இருப்பதால் அனைத்து தரப்பினரும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்தே தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு துணை பிரதமரும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :