பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தில் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
By: Nagaraj Mon, 17 Aug 2020 10:08:28 PM
கவலைக்கிடமாக உள்ளார்... பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ வல்லுநர்கள் குழு அவருக்கு சிகிச்சையளித்து வருகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.