உலகம் முழுவதும் கொரோனா வைரஸிலிருந்து 1.45 கோடி பேர் குணம்
By: Karunakaran Mon, 17 Aug 2020 3:43:11 PM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததாலும் மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனாவிலிருந்து பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.45 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது, உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.72 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா பலி மற்றும் குணமடைந்தோர் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.