Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெங்கு பாதிப்பு ... இந்த மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 1 வாரம் விடுமுறை

டெங்கு பாதிப்பு ... இந்த மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 1 வாரம் விடுமுறை

By: vaithegi Mon, 07 Nov 2022 4:56:57 PM

டெங்கு பாதிப்பு  ...   இந்த மாநிலத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு 1 வாரம் விடுமுறை

அசாம் : நாட்டில் கொரோனா தொற்று குறைந்த காலத்தில் இருந்தே அடுத்தடுத்து பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. சமீபத்தில் தான் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது.

இதனை அடுத்து அதே போன்று தற்போது அசாம் மாநிலத்தில் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.குறிப்பாக அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக டெங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி கொண்டு வருகிறது.

vacation,dengue ,விடுமுறை,டெங்கு

இதனால் அங்கு 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறை அதிகாரிகள் காய்ச்சல் அதிகமாக பரவும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனால் அசாமின் திபு முனிசிபல் போர்டு மற்றும் கிரேட்டர் டிபு டவுன் பகுதிக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நோய் தோற்று அடுத்து அதிகரிக்காத வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :