நத்தம் பேரூராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10 நாட்கள் முழு ஊரடங்கு
By: Nagaraj Fri, 10 July 2020 8:00:27 PM
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் பேரூராட்சிக்கு 10 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் திண்டுக்கல்லிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்கு 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில்
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை 11ம் தேதி முதல் வரும் 20ம் தேதி
வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பால் விற்பனை
மற்றும் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும். இதற்கு அனைத்து
வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.