Advertisement

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 10 பேர் இன்று பாதிப்பு

By: vaithegi Fri, 13 Jan 2023 9:26:08 PM

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 10 பேர் இன்று பாதிப்பு

சென்னை: புதியாக 10 பேர் பாதிப்பு ... உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து கொரோனா தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,vaccine,infection ,கொரோனா ,தடுப்பூசி ,பாதிப்பு

இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 10 பேர் இன்று பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 4 பேர், பெண்கள் 6 பேர் அடங்குவர். சென்னையில் 3 பேர், கோவை, நாமக்கல்லில் தலா 2 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். செங்கல்பட்டு, மதுரை போன்ற மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.

சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பயணிக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. 33 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனா சிகிச்சையில் 56 பேர் உள்ளனர்.

Tags :
|