Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தற்கொலை படை தாக்குதலில் நடத்திய கொடூரம்... பள்ளி மாணவர்கள் 100 பேர் பலி

தற்கொலை படை தாக்குதலில் நடத்திய கொடூரம்... பள்ளி மாணவர்கள் 100 பேர் பலி

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:22:01 PM

தற்கொலை படை தாக்குதலில் நடத்திய கொடூரம்... பள்ளி மாணவர்கள் 100 பேர் பலி

காபூல்: மிகப்பெரிய தாக்குதல்... தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் காபூலில் உள்ள கல்வி நிலையத்தை சேர்ந்த 100 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இது பெரும் ோகத்தையும் பரபரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கு காபூலில் காவல் நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

kabul,students,bodies scattered,suicide squad,great tragedy ,காபூல், மாணவர்கள், உடல் சிதறினர், தற்கொலை படை, பெரும் சோகம்

இந்த நிலையில் காஜ் உயர்நிலைப்பள்ளியில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படத்தில் 100 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது இந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி நிலையத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் காபூல் மக்கள் மத்தியில் பெரும் ோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|