ஈரோட்டில் இன்று முதல் வருகிற 25-ந் தேதி வரை 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
By: vaithegi Fri, 21 Oct 2022 1:58:53 PM
ஈரோடு : தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. 22 மற்றும் 23-ந்தேதி விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பஸ் மற்றும் ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்ற வகையில் உள்ளனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags :