Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்படும்

நாளை முதல் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்படும்

By: vaithegi Thu, 14 Sept 2023 3:23:43 PM

நாளை முதல் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்படும்


சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், முதற்கட்டமாக நாளை ரூ.1000 உரிமைத்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட இருக்கிறது.

இதன் பின், நாளை முதல் பெரும்பான்மையான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

head of family,interest , குடும்ப தலைவி,உரிமைத்தொகை

அடுத்ததாக, வங்கி கணக்கு இல்லாமலிருந்த குடும்ப தலைவிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரத்யேக கார்டினை வழங்கியுள்ளார்.

நவீன் சிப் பொருத்தப்பட்ட இக்கார்டுகள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தவர்களுக்கு தரப்படவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் குடும்ப தலைவிகள் இந்த கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags :