செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,052 பேர் சிகிச்சை
By: Monisha Fri, 06 Nov 2020 5:23:17 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 44 ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 7,06,444 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,272-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,03,085 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 676 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 688 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,052 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.