இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா உறுதி
By: vaithegi Wed, 24 Aug 2022 10:47:07 AM
இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 649 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனவே இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,68,195 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று, தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,452 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,677 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,44,301 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 96,442 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,10,58,83,682 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,17,979 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கு இடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,07,096 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,35,23,886 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.