Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு விரைவு பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி

அரசு விரைவு பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி

By: vaithegi Mon, 05 Sept 2022 4:23:58 PM

அரசு விரைவு பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திட்டமானது அமலுக்கு வர உள்ளது.

govt express bus,discount ,அரசு விரைவு பேருந்து,10% தள்ளுபடி

அதாவது பயணிகள் நீண்ட தூரம் பஸ்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், இணையதளம் மூலமாக இருவருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சலுகை விழா காலங்களில் பொருந்தாது என்றும் இதர நாட்களில் வழக்கம் போல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :