- வீடு›
- செய்திகள்›
- 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முடிவடைந்தால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முடிவடைந்தால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
By: vaithegi Fri, 10 June 2022 8:10:39 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் மே மாதம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன நிலையில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது.
இதற்காக. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இதன்மூலம் விடைத்தாள் திருத்தும் மிக விரைவில் முடிவடையும் என எதிர்க்கப்படுகிறது.
தினமும் குறைந்தபட்சம் 24 விடைத்தாள்கள் வீதம் திருத்தி முடிக்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகளை முடித்து ஜூலை 7-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.