10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 18-ம் தேதி முதல் விநியோகம்
By: vaithegi Wed, 16 Aug 2023 6:56:12 PM
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வருகிற 18-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்க இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வருகிற 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல்
அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.
மேலும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags :
supply |