Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் .. நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பு

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் .. நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பு

By: vaithegi Thu, 17 Aug 2023 12:51:15 PM

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்  .. நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பு

சென்னை: அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகம் .... தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை காலை 10 மணி முதல் வழங்கப்படவுள்ளது.

எனவே, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

original marks certificate,distribution,examination ,அசல் மதிப்பெண் சான்றிதழ் ,விநியோகம் ,தேர்வு

அதேபோன்று, பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் நாளை மதியம் வெளியிடப்படுகிறது.

இதனை அடுத்து அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags :