Advertisement

10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி

By: Monisha Sat, 23 May 2020 6:09:40 PM

10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கிடையே மாணவர்கள் தேர்வு எழுதுவதால், அவர்களுக்கு மன அழுத்தம் இருக்கும். மேலும் அவர்கள் பெரும் பீதியுடன்தான் தேர்வுக்கு வருவார்கள். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி மற்றும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

tamil nadu,class 10th,students,tamil nadu government,general examination ,தமிழ்நாடு,10-ம் வகுப்பு,மாணவர்கள்,தமிழக அரசு,பொதுத் தேர்வு

எந்த மாதிரியான பதிலளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. 6820 மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்.

மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி நிதியில் தன்னார்வ அமைப்பு மூலம் 5 ஆயிரம் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

Tags :