சென்னையில் கொரோனாவுக்கு 11,209 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்
By: Monisha Sat, 15 Aug 2020 3:38:59 PM
தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும், 5 ஆயிரத்து 514 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,14,260 ஆக உள்ளது. தற்போது 11,209 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,279
அண்ணா நகர் - 1,160
தேனாம்பேட்டை - 659 பேர்
தண்டையார்பேட்டை - 586
ராயபுரம் - 801
அடையாறு - 1,079
திரு.வி.க. நகர் - 623
வளசரவாக்கம் - 895
அம்பத்தூர் - 1,492
திருவொற்றியூர் - 296
மாதவரம் - 537
ஆலந்தூர் - 619
பெருங்குடி - 460
சோழிங்கநல்லூர் - 437
மணலி - 125