Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல்

By: vaithegi Thu, 14 Sept 2023 1:27:37 PM

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல்



சென்னை: ஏடிஸ் எனப்படும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குபற்றிய றித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் கொழு ஒழிப்பு பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. காய்ச்சலால் அவதிப்படும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

dengue,procedures ,டெங்கு ,நடவடிக்கைகள்

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதேபோன்று செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை 201 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யபட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது

Tags :
|