Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 09 June 2020 11:13:30 AM

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் நோய்த்தொற்றில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது. 11,256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224-ஆக உள்ளது.

india,coronavirus,tamil nadu,madras,corona confirmation ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,கொரோனா தொற்று

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 2,539 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,273 பேருக்கும், அண்ணாநகரில் 2,068 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 3,019 பேரும், தேனாம்பேட்டையில் 2,646 பேரும், திருவொற்றியூரில் 870 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,088 பேருக்கும், பெருங்குடியில் 421 பேருக்கும், அடையாறில் 1,325 பேருக்கும், அம்பத்தூரில் 828 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 412 பேருக்கும், மாதவரத்தில் 650 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 420 பேருக்கும், மணலியில் 343 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|
|