Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

By: Monisha Wed, 19 Aug 2020 09:53:54 AM

தேனி மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 2,89,787 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

theni district,corona virus,infection,treatment,discharge ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, சேலம், கோவை, கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 10,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,601 ஆக அதிகரித்துள்ளது.

Tags :