- வீடு›
- செய்திகள்›
- 11 ,12 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் இந்த தேதி வெளியீடு
11 ,12 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் இந்த தேதி வெளியீடு
By: vaithegi Fri, 01 Sept 2023 3:23:00 PM
சென்னை: துணைத்தேர்விற்கான மறு கூட்டல் முடிவு செப்.4 வெளியிடப்படும் என தேர்வுத்துறை சார்பில் அறிவிப்பு ...தமிழகத்தில் 11 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்தாண்டிலேயே உயர்கல்வி தொடங்க வேண்டும் என்கிற நோக்கில் மிக விரைவில் துணை தேர்வு நடத்தப்பட்டது.
அதாவது, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கானதுணைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.
இந்த நிலையில், துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கும் பள்ளி மாணவர்களின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுயிருந்தது. இந்நிலையில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டு முடிவுகள் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பிற்கான முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.