Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டில் பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

செங்கல்பட்டில் பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

By: vaithegi Wed, 08 Feb 2023 5:45:19 PM

செங்கல்பட்டில் பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இக்குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

ration card,chengalpattu , ரேஷன் கார்டு,செங்கல்பட்டு

எனவே அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 11-ந்தேதிவட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு-கொளத்தூர், செய்யூர்-பொலம்பாக்கம், மதுராந்தகம்-மங்கலம், திருக்கழுக்குன்றம்-புலிக்குன்றம், திருப்போரூர்-திருநிலை, வண்டலூர்- குமிழி. மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல்,

இதையடுத்து பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :