Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 23 Oct 2023 12:17:16 PM

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

சென்னை : வடகிழக்கு பருவ மழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கியது.

எனவே இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry and karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்

இதனை அடுத்து வருகிற 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

Tags :
|