Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Sat, 11 July 2020 4:12:58 PM

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

நேபாள நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, அங்குள்ள மைக்டி, ஜஜர்கோட், சிந்துபல்சோக் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் நேபாள நாட்டு மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, நிலச்சரிவில் சிக்கியவர்களில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய 19-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

nepal,landslide,dead,heavy rain ,நேபாளம், நிலச்சரிவு, இறந்த, பலத்த மழை

நேபாளத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் ஓடும் முக்கிய நதிகளில் நீர் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேபாள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் பல நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. தற்போது சில நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Tags :
|
|