Advertisement

மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு கசையடி தண்டனை

By: Nagaraj Thu, 24 Nov 2022 3:36:46 PM

மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு கசையடி தண்டனை

ஆப்கன்: ஆப்கானிஸ்தானில் பழைய முறைப்படி 3 பெண்கள் உள்பட 12 பேரை பொது இடத்தில் வைத்து கசையடி தந்து தண்டித்தது தாலிபன் அரசு.

ஆப்கானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள தாலிபன்கள், 90 களில் கடைபிடித்த அதே வகையான தண்டனை முறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளனர்.

flogging,punishment,afghan,taliban,old method ,
கசையடி, தண்டனை, ஆப்கன், தாலிபன், பழைய முறை

குற்றவாளிகளுக்கு கசையடி கொடுப்பதை காண வருமாறு முஜாயிதீன், மூத்த மற்றும் பழங்குடித் தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண ஆளுநர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.

ஒவ்வொருவருக்கும் 21 முதல் 39 கசையடிகள் கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Tags :
|