Advertisement

இந்தியாவில் புதியதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Tue, 10 Jan 2023 12:53:54 PM

இந்தியாவில் புதியதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

அடுத்து கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. எனவே அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 121 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46.80.215 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 5,30,722 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,319 ஆக அதிகரித்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதனை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,47,174 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை மட்டும் 220.14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|