சென்னையில் கொரோனாவுக்கு 12,256 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்
By: Monisha Thu, 20 Aug 2020 3:09:09 PM
சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,413 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். இதுவரையில் 6,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,20,267 ஆக உள்ளது. 12,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,413
அண்ணா நகர் - 1,374
தேனாம்பேட்டை - 716
தண்டையார்பேட்டை - 691
ராயபுரம் - 771
அடையாறு - 1,167
திரு.வி.க. நகர் - 740
வளசரவாக்கம் - 1,103
அம்பத்தூர் - 1,482
திருவொற்றியூர் - 272
மாதவரம் - 631
ஆலந்தூர் - 553
பெருங்குடி - 45
சோழிங்கநல்லூர் - 419
மணலி - 164