சென்னையில் கொரோனாவுக்கு 12,287 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்
By: Monisha Fri, 21 Aug 2020 4:35:53 PM
தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 283 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,21,450 ஆக உள்ளது. தற்போது பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,470
அண்ணா நகர் - 1,417
தேனாம்பேட்டை - 724
தண்டையார்பேட்டை - 669
ராயபுரம் - 749
அடையாறு - 1,226
திரு.வி.க. நகர் - 794
வளசரவாக்கம் - 1,211
அம்பத்தூர் - 1,339
திருவொற்றியூர் - 267
மாதவரம் - 626
ஆலந்தூர் - 522
பெருங்குடி - 466
சோழிங்கநல்லூர் - 430
மணலி - 152