Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 12,560 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 12,560 பேர் சிகிச்சை

By: Monisha Tue, 06 Oct 2020 4:33:17 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 12,560 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 12,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,74,143 ஆக உள்ளது. 12,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் புதிதாக 1,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா தாக்குதலிருந்து இதுவரை 1,58,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 3,293 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,313
அண்ணா நகர் - 1,309
தேனாம்பேட்டை - 1,245
தண்டையார்பேட்டை - 903
ராயபுரம் - 936
அடையாறு- 1,117
திரு.வி.க. நகர்- 1,078
வளசரவாக்கம்- 847
அம்பத்தூர்- 902
திருவொற்றியூர்- 373
மாதவரம்- 538
ஆலந்தூர்- 640
பெருங்குடி- 527
சோழிங்கநல்லூர்- 320
மணலி - 267

Tags :
|