Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 12,929 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 12,929 பேர் சிகிச்சை

By: Monisha Wed, 07 Oct 2020 2:06:26 PM

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 12,929 பேர் சிகிச்சை

சென்னையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக 12,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,75,484 ஆக உள்ளது. 12,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,59,237 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,318 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai,corona virus,treatment,infection,death ,சென்னை,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பாதிப்பு,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,355
அண்ணா நகர் - 1,353
தேனாம்பேட்டை - 1,276
தண்டையார்பேட்டை - 914
ராயபுரம் - 960
அடையாறு- 1,062
திரு.வி.க. நகர்- 1,110
வளசரவாக்கம்- 854
அம்பத்தூர்- 913
திருவொற்றியூர்- 372
மாதவரம்- 549
ஆலந்தூர்- 673
பெருங்குடி- 533
சோழிங்கநல்லூர்- 324
மணலி - 262

Tags :