Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 1,302- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,302- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: vaithegi Tue, 02 Aug 2022 9:03:25 PM

தமிழகத்தில் இன்று 1,302- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் இன்று 1,302- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன் படி தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,302- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 46 ஆயிரத்து 907- ஆகஅதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,734- ஆகும்.

corona,chennai,number ,கொரோனா ,சென்னை,எண்ணிக்கை

மேலும் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 97 ஆயிரத்து 079- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 032- ஆக நீடிக்கிறது.

இதனை அடுத்து தலைநகர் சென்னையில் இன்று 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags :
|