Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,110 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,110 பேர் சிகிச்சை

By: Monisha Thu, 08 Oct 2020 2:34:33 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,110 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,76,779 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 13,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,60,333 பேர் சிகிச்சை முடித்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சென்னையில் 3,336 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,348
அண்ணா நகர் - 1,379
தேனாம்பேட்டை - 1,316
தண்டையார்பேட்டை - 983
ராயபுரம் - 957
அடையாறு- 1,046
திரு.வி.க. நகர்- 1,149
வளசரவாக்கம்- 836
அம்பத்தூர்- 995
திருவொற்றியூர்- 393
மாதவரம்- 548
ஆலந்தூர்- 686
பெருங்குடி- 551
சோழிங்கநல்லூர்- 311
மணலி - 241

Tags :
|